care

Dr.S.தன்வந்திரி பிரேம்வேல் தன்வந்திரி யோகா மற்றும் உணவு நிபுணர்கள் மையம்

தமிழகத்தின் சிறப்பான ஆயுர்வேத வைத்தியசாலை என்ற முறையில் யோகா பயிற்சியும் சரிஉணவு ஆலோசனைகளும் வழங்குகிறோம். இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் யோகா என்பது ஒரு முக்கியமான உடற்பயிற்சியாக மேற்கொள்ளப்படுகிறது. மற்ற மூச்சுப்பயிற்சிகளை காட்டிலும் யோகா என்பது நம்மை மோட்சத்திற்கு கொண்டு செல்லும் என்பார்கள். யோகாசனங்கள் மூலமாக உடல் மற்றும் மன வலிமையை பெறலாம்.

யோகாசனத்தின் முக்கிய நோக்கங்களை பற்றி பழமையான நூல்களில் தரப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து நம் பாரம்பரிய யோகாசன முறைகளை பற்றி தகவல் பெறுவது என்பது சுலபமான காரியம் அல்ல. Dr. S.தன்வந்திரி பிரேம்வேல் தன்வந்திரி நிலையம் ஆயுர்வேத வைத்தியசாலையில் தேவைப்படுபவர்களுக்கு பழமையான யோகாசன முறைகளையும் கற்று தருகிறோம். எங்கள் வைத்தியசாலையில் உள்ள பிரபலமான மருத்துவர்கள் யோகாசனங்கள் செய்யும் முறையை மட்டும் கற்றுத்தருவது அல்ல. ஒவ்வொரு யோகாசனத்தின் பலனையும் ஆன்மீக கோட்பாடுகளையும் விளக்குகிறார்கள். ஒருவர் அனைத்து யோகாசனத்தயும் கற்றவராக இருக்க வேண்டும் என்பதில்லை, ஆனால் யோகாசனத்தின் அடிப்படைகளை புரிந்து வைத்திருந்தால் தான் ஆரோக்கியமான மகிச்சியான வாழ்க்கையை நாம் வாழ முடியும். நாங்கள் பெருமைப்படக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் இந்தியாவிலேயே இப்படி பழமையான யோகாசன முறைகளையும் ஆன்மீக பலன்களையும் கற்று தரும் முக்கியமான பிரபலமான ஆயுர்வேத வைத்தியசாலைகளில் Dr. S.தன்வந்திரி பிரேம்வேல் தன்வந்திரி நிலையம் ஆயுர்வேத வைத்தியசாலையும் ஒன்று.

ஆரோக்கியம் என்பது உடலை சார்ந்தது மட்டும் அல்ல. மனமும் சீராக இருக்க வேண்டும். அதை வலுவாக்க ஒரு முக்கியமான வழி உணவு பழக்கம். உணவுப்பழக்கம் என்பது நம் மனதை திடமாக்கும் என்பதை நம்மில் பலரும் அறிந்திராத ஒரு உண்மை. ஆரோக்கியத்திற்கு இந்த உணவு பழக்கம் மிகவும் அவசியம். ஒரு முட்டாள்தனமான மனநிலை நம்மை எதிர்மறையான பாதையில் கொண்டுசென்று மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதுவே மகிழ்ச்சியான மனநிலை மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த உதவும்.

Dr. S.தன்வந்திரி பிரேம்வேல் தன்வந்திரி நிலையம் ஆயுர்வேத வைத்தியசாலையில் ஏராளமான சரிஉணவு திட்டங்கள் கடைபிடிக்கின்றோம். இந்த திட்டங்கள் மூலமாக ஆரோக்கியமான வாழ்க்கையை நாம் நடத்த முடியும். எங்களிடம் உள்ள உணவு நிபுணர்கள் உங்கள் பிரச்சனைகளை கண்டறிந்து சரியான உணவு முறைகளை பரிந்துரைப்பார்கள். பஞ்சகர்மா சிகிச்சையின் போது நாம் எடுத்துக்கொள்ளும் உணவுமுறை மிகவும் முக்கியம். சிகிச்சையின் போது ஏற்படக்கூடிய அத்தனை சந்தேகங்களுக்கும் எங்கள் மருத்துவர்கள் சரியான முறையில் ஆரம்பத்தில் இருந்து தரப்பட்ட சிகிச்சை முறைகளை விளக்குவார்கள். ஒருவரின் ஆரோக்கியமான வாழ்வு வைத்தியசாலையில் தொடங்குவதும் அல்ல முடிவதும் அல்ல. சரியான தகவல்களையும் முறைகளையும் பின்பற்றினால் ஆரோக்கியமான ஆனந்தமான வாழ்க்கையை நாம் வாழலாம்.