care

Dr.S.தன்வந்திரி பிரேம்வேல் தன்வந்திரி பஞ்சகர்மா சிகிச்சை மையம்

பஞ்சகர்மா சிகிச்சை முறை ஒவ்வொரு மனிதனின் உடலையும் மனதையும் பலப்படுத்தக்கூடிய ஒரு முறை. இந்த முறையின் மூலம் நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்சகர்மா என்பது ஆயுர்வேத முறைகளில் சிறப்பான ஒரு முறையாக கருதப்படுகிறது. பஞ்ச என்றால் ஐந்து , கர்மா என்றால் சிகிச்சை. இந்த முறையில் ஐந்து செயல்முறைகள் பின்பற்றப்படுகிறது. இயற்கையிலேயே நம் உடலில் உள்ள நச்சுக்கள் தானாகவே வெளியேறும். ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் சத்து இல்லாத ஆகாரத்தினாலும் மனஅழுத்தத்தினாலும் நம் செரிமான முறையும், சுரப்பிகளின் செயல்பாடும் பல மாற்றங்களை சந்தித்துள்ளது.

ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நச்சுத்தன்மையை வெளியேற்றும் சிறப்பான முறையான பஞ்சகர்மாவில் “வாமன , விரேசனா , நிறூஹவஸ்தி , நஸ்ய மற்றும் அனுவாசனாவஸ்தி” என்று 5 செயல்முறைகள் உள்ளன. ஒவ்வொரு செயல்முறையிலும் ஒவ்வொரு விதத்தில் நச்சுத்தன்மை வெளியேற்றப்படும். எந்த ஒரு முறையாக இருந்தாலும் அதை செய்வதற்கு முன் நம் உடலை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். நம் தன்வந்திரி நிலையம் ஆயுர்வேத வைத்தியசாலையில் தரமான இயற்கையான மருந்துகளை வைத்தும் திறமையான சிகிச்சையாளர்களை வைத்தும் மருத்துவம் செய்யப்படுகிறது.

எங்களின் இயற்கை எண்ணெய் தோலின் வழியாக ஊடுருவிச்சென்று ரத்தஓட்டத்தை அதிகரிக்கும். எங்கள் தன்வந்திரி பஞ்சகர்மா சிகிச்சை மையத்தில் தரமான கலப்படமில்லாத இயற்கை மூலிகைகளை மட்டும் வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். இதன் காரணமாக இதற்கு முன் நீங்கள் எடுத்துக்கொண்ட சிகிச்சைகளை காட்டிலும் எங்கள் மையத்தில் எடுக்கும் சிகிச்சை அதிக பலன்களை தரும். எங்களின் சிகிச்சை மூலமாக உங்கள் உடல் தானாகவே பிரச்சனைகளை சரிசெய்ய துவங்கும் இதுவே ஆயுர்வேதத்தின் தலையான குறிக்கோள்…

"ஸ்வஸ்தஸ்ய ஸ்வாஸ்திய ரக்ஷணம்
ஆதுரஸ்ய விகார பிரஷமனம்"

இயற்கையிலேயே தற்காத்துக்கொள்வது நம் உடலுக்கு உண்டு ஆனால் வெளியில் இருக்கும் சூழல் அந்த தன்மையை குறைக்கிறது. பஞ்சகர்மா முறையை பயன்படுத்தி நம் உடலை இயற்கையான முறைக்கு மாற்றலாம். இந்த முறையின் மூலம் உங்கள் உடலையும் மனதையும் மட்டும் நீங்கள் கட்டுப்படுத்துவதில்லை. உங்கள் உணர்வுகளையும் கூட பஞ்சகர்மா முறையின் மூலம் கையாளலாம். மனம், உடல், உணர்ச்சி இந்த மூன்றையும் சரியான முறையில் கையாளும் பொழுது மகிழ்ச்சி தானாக கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மக்கள் எங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று தங்களது வாழ்வை புதுப்பித்து மகிச்சியுடன் இருக்கிறார்கள். எங்களது மற்ற சிகிச்சை முறைகளை காட்டிலும் பஞ்சகர்மா தனி நபரின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க பெரிதும் உறுதுணையாக இருப்பதாக இங்கு வரும் மக்கள் தெரிவிக்கிறார்கள். Dr. S.தன்வந்திரி பிரேம்வேல் தன்வந்திரி பஞ்சகர்மா சிகிச்சை மையத்தின் நோக்கம் உடலை மட்டும் குணப்படுத்துவது அல்ல. மனதையும் குணப்படுத்தும்.