care

Dr.S.தன்வந்திரி பிரேம்வேல் தன்வந்திரி இயற்கை உணவுப்பொருட்கள்

Dr. S.தன்வந்திரி பிரேம்வேல் தன்வந்திரி நிலையம் ஆயுர்வேத வைத்தியசாலையில் நாங்கள் தரமான ஆரோக்கியமான இயறக்கை உணவுப்பொருட்களை மட்டுமே வழங்குகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்வது சுலபமான காரியம் அல்ல, இருப்பினும் முடியாத காரியம் அல்ல. ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள நமக்கு சரியான உணவு பழக்கமும் தரமான இயற்கை உணவும் அவசியம். எங்கள் மையத்தில் உள்ள நிபுணர்களிடம் இருந்து நீங்கள் சரிஉணவு அட்டவணைகளையும் அதனால் பெறப்படும் நன்மைகளையும் அறிந்து கொள்ளலாம். எங்கள் வைத்தியசாலையில் பத்தியாஹார முறையின் முக்கியத்துவத்தையும் அதற்கு தேவையான உணவுப்பொருட்களையும் வழங்குகிறோம்.

எங்கள் நிலையத்தில் தரப்படும் உணவுப்பொருட்கள் அனைத்தும் எங்கள் தோட்டத்தில் விளையவைக்கப்பட்டது. நாங்கள் எந்த ஒரு கேடு விளைவிக்கும் ரசாயனத்தையும் பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்தாமல் பயிர்களை விளைவிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு எங்கள் இயற்கை உணவு பெரிதும் உதவுகிறது. நாங்கள் நவீன கருவிகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி எங்களிடம் இருக்கும் வளங்களை மீள்சுழற்சி செய்கிறோம். இதன் மூலம் சுற்றுச்சூழலும் பல்லுயிரும் பாதுகாக்கப்படுகிறது.

வழக்கமான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்களை காட்டிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் சத்தானவை என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இருப்பினும் செயற்கை ரசாயன பயன்பாட்டை குறைப்பதன் மூலம் உணவின் பாதுகாப்பு அதிகரிக்கிறது. ரசாயனங்கள் அதிகமாக பயன்படுத்தும் பொழுது உட்கொள்வோரின் ஆரோக்கியத்தை அது கெடுக்கும். அதிகமான நச்சுப்பொருட்கள் நம் உணவில் சேர்க்கப்படும் பொழுது நீண்ட காலம் ஆரோக்கியக்கேட்டை அது ஏற்படுத்தலாம். ஆரோக்கியம் உடற்பயிற்சி சரிஉணவுப்பழக்கம் இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையது. சரியாக கையாண்டால் சரியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

தற்போதைய நிலையில் பல நிறுவனங்கள் இயற்கை உணவு தயாரிப்பை மேற்கொள்கிறது. இருப்பினும் அவை அனைத்தும் இரண்டாம் தர பொருட்களே ஆகும். நம் வைத்தியசாலையில் வழங்கப்படும் அணைத்து உணவுப்பொருட்களும் உயர் தரம் வாய்ந்தவை. மருத்துவத்துறையில் அனைத்து சுகாதார அம்சங்களையும் கையாளவேண்டும் என்பதில் எங்களுக்கு சமுதாய பொறுப்பு உண்டு. தமிழகத்தின் தலைசிறந்த ஆயுர்வேத வைத்தியசாலை என்ற முறையில் நாங்கள் தரமான முழுமையான அனுபவங்களை ஒவ்வொருவருக்கும் வழங்கி அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள உதவுகின்றோம்.